செய்திகள்
கைது

திருவையாறு அருகே மதுவிற்ற 3 பேர் கைது

Published On 2021-09-10 09:58 GMT   |   Update On 2021-09-10 09:58 GMT
திருவையாறு அருகே மதுவிற்ற 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவையாறு:

திருவையாறு பகுதிகளில் மதுவிற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் திருவையாறை அடுத்த கோனேரிராஜபுரம் காளியம்மன்கோவில் தெருவை சேர்ந்த மூர்த்தி (வயது37), லால்குடி தாலுகா செங்கரையூர் லயன்கரையை சேர்ந்த தேவர் (61), கோனேரிராஜபுரம் மெயின்ரோட்டை சேர்ந்த சுரேஷ் மனைவி மாரியம்மாள் (32) ஆகியோர் என்பதும், மதுவிற்றதும் தெரியவந்தது. இதுகுறித்து நடுக்காவேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜோஸ்பின் சிசாரா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த 57 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News