செய்திகள்
மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளி

சீனாவில் கொரோனா வைரசுக்கு மேலும் 29 பேர் பலி- இறப்பு விகிதம் கணிசமாக குறைந்தது

Published On 2020-02-27 03:04 GMT   |   Update On 2020-02-27 07:14 GMT
சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பினால் நேற்று மேலும் 29 பேர் உயிரிழந்தனர். ஜனவரி மாதத்திற்கு பிறகு இறப்பு விகிதம் இப்போதுதான் இந்த அளவிற்கு குறைந்துள்ளது.
பீஜிங்:

சீனாவில் ஹுபெய் மாகாணம் வுகான் நகரில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் நாடு முழுவதிலும் பரவி, பெருமளவிலான உயிரிழப்பை ஏற்படுத்தி உள்ளது. சீனாவைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளுக்கும் பரவி அச்சுறுத்தி வருகிறது. 

சீனாவில் தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் கொரோனா பாதிப்பினால் உயிரிழந்த நிலையில், கடந்த சில தினங்களாக வைரஸ் பரவுவது குறைய தொடங்கியுள்ளது. இறப்பு விகிதமும் படிப்படியாக குறைந்து வருகிறது. 

சீனாவில் நேற்று மேலும் 29 பேர் கொரோனா வைரசுக்கு பலியாகி உள்ளனர். இதன்மூலம் சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பலியானோரின் எண்ணிக்கை 2744 ஆக உயர்ந்திருப்பதாக தேசிய சுகாதார ஆணையம் கூறி உள்ளது. கடந்த ஜனவரி மாதம் 29-ம் தேதி 26 பேர் கொரோனாவுக்கு பலியாகியிருந்தனர். அதன்பின்னர் இப்போதுதான் அந்த அளவை விட இறப்பு விகிதம் குறைந்துள்ளது. 

ஒட்டு மொத்தமாக கிட்டத்தட்ட 78 ஆயிரத்து 500 பேர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உள்ளனர். நேற்று புதிதாக 433 பேர் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். 
Tags:    

Similar News