ஆன்மிகம்
நாராயண சுவாமி

நாராயண சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா

Published On 2020-09-16 05:04 GMT   |   Update On 2020-09-16 05:04 GMT
பிரசித்திபெற்ற ஸ்ரீமன் நாராயண சுவாமி திருத்தாங்கலில் ஆவணி திருவிழா நிறைவு பெற்றதை முன்னிட்டு அய்யா இந்திர வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது.
சேரன்மாதேவியை அடுத்த கங்கணான்குளம் அருகே உள்ள திருவிருத்தான்புள்ளி-வேலியார்குளத்தில் உள்ள பிரசித்திபெற்ற ஸ்ரீமன் நாராயண சுவாமி திருத்தாங்கலில் ஆண்டுதோறும் ஆவணி திருவிழா விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான ஆவணி திருவிழா கடந்த 4-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழா நாட்களில் அய்யாவுக்கு பணிவிடை, உச்சிப்படிப்பு, தர்மம், திரு ஏடுவாசிப்பு, சிறப்பு வழிபாடு, சிறப்பு அலங்காரத்தில் பல்வேறு வாகனங்களில் வீதியுலா, அன்ன தர்மம் என பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றது.

விழா நிறைவு நாளான நேற்று முன்தினம் அய்யா இந்திர வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது. இதில் திருவிருத்தான்புள்ளி, வேலியார்குளம், கங்கணான்குளம், சேரன்மாதேவி மற்றும் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த அன்புக்கொடி மக்கள் பங்கேற்றனர்.
Tags:    

Similar News