செய்திகள்
அரசுத் தேர்வுகள் இயக்ககம்

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 1, பிளஸ் 2 துணைத்தேர்வு: செப்டம்பர் 21ந் தேதி தொடங்குகிறது

Published On 2020-08-20 02:24 GMT   |   Update On 2020-08-20 02:24 GMT
எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்பு துணைத்தேர்வுகளுக்கு, தனித்தேர்வர்களும், பிளஸ்-2 மற்றும் பிளஸ்-1 தேர்வுகள் எழுதி தோல்வி அடைந்த, வருகைப்புரியாத தேர்வர்களும் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
சென்னை:

அரசு தேர்வுகள் இயக்குனர் சி.உஷாராணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

செப்டம்பர்-2020 எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்பு துணைத்தேர்வுகளுக்கு, தனித்தேர்வர்களும், பிளஸ்-2 மற்றும் பிளஸ்-1 தேர்வுகள் எழுதி தோல்வி அடைந்த, வருகைப்புரியாத தேர்வர்களும் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

மார்ச்-2020 எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு எழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்கள், செப்டம்பர்-2020 துணைத்தேர்வை எழுத தற்போது மீண்டும் விண்ணப்பிக்க தேவையில்லை. மார்ச் 2020 பிளஸ்-1, பிளஸ்-2 தேர்வுக்கு விண்ணப்பிக்காதவர்களும், 2020-ம் ஆண்டுக்கான எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்காதவர்களும் துணைத்தேர்வு எழுத கல்வி மாவட்டம் வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத்தேர்வுகள் சேவை மையங்களுக்கு வருகிற 24-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை சென்று விண்ணப்பிக்கலாம்.

அதேபோல், மார்ச்-2020 பிளஸ்-1, பிளஸ்-2 தேர்வில் பள்ளி மாணவர்களாக தேர்வு எழுதி, தேர்ச்சிபெறாத மற்றும் வருகை புரியாதவர்கள், தனித்தேர்வர்கள் மீண்டும் தேர்வு எழுதுவதற்கும் வருகிற 24-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதுகுறித்த கூடுதல் விவரங்களுக்கு www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் சென்று தெரிந்துகொள்ளலாம்.

எஸ்.எஸ்.எல்.சி. வகுப்புக்கான துணைத்தேர்வு அடுத்த மாதம் (செப்டம்பர்) 21-ந் தேதி தொடங்கி 26-ந் தேதி வரையிலும், பிளஸ்-1 வகுப்புக்கு செப்டம்பர் 29-ந் தேதி முதல் அக்டோபர் 7-ந் தேதி வரையிலும், பிளஸ்-2 வகுப்புக்கு செப்டம்பர் 21-ந் தேதி தொடங்கி 28-ந் தேதி வரையிலும் நடைபெற உள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News