செய்திகள்
பாக்கு தோப்புக்குள் ஊடுபயிராக பயிரிட்டுள்ள வாழைகள்

பாக்கு தோப்புக்குள் ஊடுபயிராக வாழைகள் பயிரிட்டுள்ள விவசாயிகள்

Published On 2021-01-13 09:36 GMT   |   Update On 2021-01-13 09:36 GMT
கூடலூர் பகுதியில் பாக்கு தோப்புக்குள் ஊடுபயிராக வாழைகளை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர்.
கூடலூர்:

கூடலூர் பகுதியில் தேயிலை, காபி, நேந்திரன் வாழை மற்றும் இஞ்சி, ஏலக்காய், கிராம்பு உள்பட பல்வேறு காய்கறிகளும் விளைவிக்கப்படுகிறது. இந்த நிலைமை நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழை அதிகளவு பெய்ததால் விவசாய நிலங்களை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் இஞ்சி, தேயிலை உள்ளிட்ட விவசாய பயிர்கள் நீரில் மூழ்கியது. மேலும் நோய் தாக்குதலால் பாக்கு விளைச்சல் அடியோடு பாதித்தது. மழை வெள்ளம் அதிகளவு சூழ்ந்ததால் பாக்கு விளைச்சல் பாதிக்கப்பட்டதாக தோட்டக்கலைத் துறையினர் விளக்கம் அளித்திருந்தனர்.

இந்த நிலையில் நோய்த் தாக்குதலால் போதிய வருமானம் இன்றி பாக்கு விவசாயிகள் சிரமம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து கூடலூர் தொரப்பள்ளி, கம்மாத்தி, மண்வயல், பாடந்தொரை உள்பட பல இடங்களில் பாக்கு தோப்புக்குள் ஊடுபயிராக நேந்திரன் வாழைகளை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர். இதுகுறித்து பாக்கு விவசாயிகள் கூறியதாவது:-

நடப்பாண்டில் வெள்ள பாதிப்பால் பாக்கு மரங்களை நோய் அதிகளவு தாக்கி உள்ளது. இதனால் விளைச்சலும் குறைந்து விட்டது. தற்போது கிலோ ரூ.42 வரை விலை கிடைக்கிறது. ஆனால் விளைச்சல் இல்லாததால் வருவாய் ஈட்ட முடியவில்லை. இதனால் கூடுதல் வருவாய் ஈட்ட பாக்கு தோப்புக்குள் நேந்திரன் வாழைகளை பயிரிட்டு வருகிறோம். தொடர்ந்து வாழைகளுக்கு உரங்கள் இட்டு பராமரித்து வருவதால் பாக்கு மரங்களுக்கும் உரங்கள் சென்றடையும். இதனால் ஒரே செலவில் 2 பயிர்களை பராமரிக்கும் யுக்தியாக கருதப்படுகிறது. மேலும் வரும் மாதங்களில் பாக்கும், வாழையும் விளைச்சல் அதிகரிப்பதால் இரட்டிப்பான பலன்களைப் பெறலாம் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
Tags:    

Similar News