செய்திகள்
கைது

ராசிபுரம் அருகே குட்கா விற்ற 2 பேர் கைது

Published On 2021-11-17 18:02 GMT   |   Update On 2021-11-17 18:02 GMT
ராசிபுரம் அருகே குட்கா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராசிபுரம் டவுன் கமலம் மண்டபம் அருகில் மிட்டாய் வியாபாரம் செய்து வந்தவர் இனாய்துல்லா (வயது 50). இவர் தனது ஆம்னி வேனில் குட்கா பொருட்கள் விற்பனைக்காக எடுத்து சென்றதை போலீசார் கண்டுபிடித்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் திருச்செங்கோட்டை சேர்ந்த வெங்காய வியாபாரி விஜயகுமார் (49) என்பவரிடம் இருந்து குட்கா வாங்கியதாக தெரிவித்தார். இதையடுத்து விஜயகுமாரையும் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 35 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News