செய்திகள்
சூளகிரி அருகே கிரானைட் கல் விழுந்து வடமாநில வாலிபர் பலி
சூளகிரி அருகே பணியில் ஈடுபட்டிருந்த போது வடமாநில வாலிபர் மீது கிரானைட் கல் விழுந்தது. இதில் வலியால் அலறித்துடித்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
சூளகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே அளகுபாவி அருகே தனியார் கிரானைட் கம்பெனி உள்ளது. இங்கு அசாம் மாநிலத்தை சேர்ந்த ஆல்பாட் ஒராங் (வயது 35) என்பவர் கடந்த இரண்டு வருடங்களாக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் நேற்று மதியம் அவர் பணியில் ஈடுபட்டிருந்தபோது, திடீரென கிரானைட் கல் ஒன்று அவர் மீது சரிந்து விழுந்தது. இதனால் வலியால் அலறித்துடித்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்துவந்து ஆர்பாட் ஒராங் உடலை மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.