செய்திகள்
என்ஆர் காங்கிரஸ்

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சியை கைப்பற்றியது

Published On 2021-05-02 18:23 GMT   |   Update On 2021-05-02 19:23 GMT
புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் 16 இடங்களைக் கைப்பற்றி என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்கிறது.
புதுச்சேரி:

30 இடங்களை கொண்ட புதுச்சேரி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த மாதம் 6-ந் தேதி நடந்தது. இதில் 81.70 சதவீத வாக்குகள் பதிவாகின. தேர்தல் நடந்து 24 நாட்களுக்கு பின் 6 மையங்களில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.  
 
வாக்கு எண்ணிக்கை தொடங்கிய சிறிது நேரத்தில் முன்னிலை நிலவரம் தெரியத்தொடங்கியது. என்.ஆர் காங்கிரஸ் கூட்டணி தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தது.

இந்நிலையில், 30 தொகுதிகளில் 10 தொகுதிகளில் என்.ஆர்.காங்கிரஸ், 6 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. சுயேச்சை 6 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

இதன்மூலம் புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைக்கிறது.
Tags:    

Similar News