வழிபாடு
60 ஆண்டுகளுக்கு பிறகு ஆண்டாள் நிகழ்த்திய அற்புதம்
ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலில் இருந்து ஆண்டாள் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளி மேளதாளம் முழங்க பிறந்த நந்தவனத்திற்கு சென்றார். அங்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடத்தப்பட்டது.
ஒவ்வொரு மாதமும் வரும் பூரம் நட்சத்திரத்தன்று, ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் வளாகத்தில் ஆண்டாள் பிறந்த இடமான நந்தவனத்தில் அவர் காட்சி அளிப்பது வழக்கம். ஆனால் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதத்தில் மட்டும் நந்தவனத்தில் ஆண்டாள் காட்சி அளிப்பது இல்லை.
ஏன் என்றால், மார்கழி மாதத்தில் ராப்பத்து, பகல் பத்து உற்சவம் நடைபெறும் என்பதால், பிறந்த இடமான நந்தவனத்திற்கு ஆண்டாள் வருவதில்லை. இந்த ஆண்டு மார்கழி மாதத்தில் ராப்பத்து மற்றும் வைகுண்ட ஏகாதசி நிகழ்ச்சிகள் தள்ளி வருவதால் சுமார் 60 ஆண்டுகளுக்கு பிறகு மார்கழி மாத பூரம் நட்சத்திரமான நேற்று மாலை ஆண்டாள், தான்பிறந்த இடமான நந்தவனத்தில் காட்சி அளித்தார்.
இந்த அற்புத நிகழ்வுக்காக கோவிலில் இருந்து ஆண்டாள் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளி மேளதாளம் முழங்க பிறந்த நந்தவனத்திற்கு சென்றார். அங்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடத்தப்பட்டது. ஏராளமானோர் சாமி தரிசனம் செய்தனர்.
ஏன் என்றால், மார்கழி மாதத்தில் ராப்பத்து, பகல் பத்து உற்சவம் நடைபெறும் என்பதால், பிறந்த இடமான நந்தவனத்திற்கு ஆண்டாள் வருவதில்லை. இந்த ஆண்டு மார்கழி மாதத்தில் ராப்பத்து மற்றும் வைகுண்ட ஏகாதசி நிகழ்ச்சிகள் தள்ளி வருவதால் சுமார் 60 ஆண்டுகளுக்கு பிறகு மார்கழி மாத பூரம் நட்சத்திரமான நேற்று மாலை ஆண்டாள், தான்பிறந்த இடமான நந்தவனத்தில் காட்சி அளித்தார்.
இந்த அற்புத நிகழ்வுக்காக கோவிலில் இருந்து ஆண்டாள் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளி மேளதாளம் முழங்க பிறந்த நந்தவனத்திற்கு சென்றார். அங்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடத்தப்பட்டது. ஏராளமானோர் சாமி தரிசனம் செய்தனர்.