செய்திகள்
கோப்புப்படம்

விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா

Published On 2021-01-11 02:34 GMT   |   Update On 2021-01-11 02:34 GMT
விருதுநகர் மாவட்டத்தில் நேற்று மேலும் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,252 ஆக உயர்ந்துள்ளது.
விருதுநகர்:

கொரோனா பாதிக்கப்பட்ட 16,117 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 2,757 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் அறிவிக்கப்படவில்லை.

99 பேர் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வீடுகளில் யாரும் தனிமைப்படுத்தப்படவில்லை. மாவட்டத்தில் நேற்று மேலும் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,252 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று 1,208 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில் 2, 700-க்கும் மேற்பட்டவர்களின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கப்படாதநிலை இருந்தது.

மருத்துவ பரிசோதனை முடிவுகளை தாமதப்படுத்துவதால் நோய் பரவல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படும் நிலையில் மாவட்ட சுகாதாரத்துறையினர் தொடர்ந்து பரிசோதனை முடிவுகளை தாமதிப்பது ஏன்? என்று தெரியவில்லை.

மருத்துவ பரிசோதனை முடிவுகளை தாமதிக்காமல் அறிவிக்க மாவட்ட சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஒரு பகுதியில் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுவிட்ட நிலையில் அப்பகுதியை தாமதிக்காமல் கட்டுப்பாட்டுப்பகுதியாக அறிவித்து தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.
Tags:    

Similar News