உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

ரேஷன் அரிசி கடத்திய வாலிபர் கைது- 12 மூட்டைகள் பறிமுதல்

Published On 2022-01-11 11:18 GMT   |   Update On 2022-01-11 11:18 GMT
பாளை அருகே 12 மூடை ரேஷன் அரிசி கடத்தியதாக வாலிபர் கைது செய்யப்பட்டார்.
நெல்லை: 

பாளை அருகே உள்ள திம்மராஜபுரம் பகுதியில் ஒரு வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 

இதைத்தொடர்ந்து நெல்லை மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், திம்மராஜபுரம் அருகே உள்ள பசும்பொன் நகரில் ஒரு வீட்டில் சோதனை நடத்தினர். 

அப்போது அங்கு 12 மூட்டைகளில் 450 கிலோ எடை உள்ள ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. அதை போலீசார் பறிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து ரேஷன் அரிசியை பதுக்கி வைத்த மகராஜன் (34) என்பவரை போலீசார் கைது செய்தனர். 

அவர் பல்வேறு வீடுகளுக்குச் சென்று ரேஷன் கடையில் இலவசமாக கொடுத்த அரிசியை குறைந்த விலைக்கு பெற்று, அதை கடத்தி வந்தது தெரியவந்தது.

தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News