வழிபாடு
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் பக்தர்களுக்கு அபிஷேக தீர்த்த பிரசாதம்
தற்போது கொரோனா தொற்று பரவல் குறைந்ததும் 2 ஆண்டுகளுக்கு பிறகு ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் முதல் பச்சை கற்பூர அபிஷேக தீர்த்த பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
கொரோனா தொற்று பரவல் நேரத்தில் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் பச்சை கற்பூர அபிஷேக தீர்த்த பிரசாதம் பக்தர்களுக்கு வழங்காமல் தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தனர். தற்போது கொரோனா தொற்று பரவல் குறைந்ததும் 2 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று காலை முதல் பச்சை கற்பூர அபிஷேக தீர்த்த பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
அந்தத் தீர்த்தத்தை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு.தாரக சீனிவாசுலு, கோவில் நிர்வாக அதிகாரி பெத்தி.ராஜு ஆகியோர் வழங்கினர். அப்போது கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.
அந்தத் தீர்த்தத்தை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு.தாரக சீனிவாசுலு, கோவில் நிர்வாக அதிகாரி பெத்தி.ராஜு ஆகியோர் வழங்கினர். அப்போது கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.