செய்திகள்
கோப்புபடம்

சிறுமிக்கு பாலியல் தொல்லை - வாலிபர் கைது

Published On 2021-09-20 09:56 GMT   |   Update On 2021-09-20 09:56 GMT
நடந்த சம்பவத்தை வெளியே சொன்னால் கொன்றுவிடுவேன் என அப்பாஸ் மிரட்டியதால் சிறுமி யாரிடமும் சொல்லவில்லை.
பல்லடம்:

பல்லடம் அருகே உள்ள அவிநாசிபாளையத்தைச் சேர்ந்தவர் அப்பாஸ்(வயது  24). இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. அதே பகுதியில் இருசக்கர வாகன ஒர்க்ஷாப் நடத்தி வருகிறார். 

இந்தநிலையில் அவரது வீட்டிற்கு வந்த உறவுக்கார 17 வயது சிறுமியை அப்பாஸ் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் சிறுமியிடம் வெளியே சொன்னால் கொன்றுவிடுவேன் என மிரட்டியதால் சிறுமி யாரிடமும் சொல்லவில்லை.

இதையறிந்த சிறுமியின் பெற்றோர் பல்லடம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இன்ஸ்பெக்டர் நிர்மலாதேவி விசாரணை நடத்தி அப்பாசை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தார்.
Tags:    

Similar News