செய்திகள்
விபத்து பலி

கானூர் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் லாரி சக்கரத்தில் சிக்கி தொழிலாளி பலி

Published On 2021-10-12 13:16 GMT   |   Update On 2021-10-12 13:16 GMT
கானூர் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் லாரி சக்கரத்தில் சிக்கி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீமுஷ்ணம்:

ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள கானூர் கிராமத்தை சேர்ந்தவர் அமலநாதன் (வயது 55) தொழிலாளி. இவர் அதே பகுதியில் இயங்கி வரும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு 7 மணி அளவில் விவசாயிகளிடம் கொள்முதல் செய்த நெல் மூட்டைகளை, அரசு நுகர்பொருள் வாணிப கழக குடோனுக்கு ஏற்றி செல்வதற்காக நிறுத்தப்பட்டிருந்த லாரியின் அடிப்பகுதியில் அமலநாதன் படுத்து தூங்கியதாக தெரிகிறது.

இதுபற்றி அறியாத டிரைவர் லாரியை இயக்கினார். இதில் லாரியின் அடியில் படுத்து தூங்கிய அமலநாதன், பின்பக்க சக்கரத்தில் சிக்கி, உடல்நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்த ஸ்ரீமுஷ்ணம் போலீசார், விரைந்து வந்து, பலியான அமலநாதன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News