செய்திகள்
பிரகாஷ் ஜவடேகர்

யானைகளை கொல்வது இந்திய கலாசாரம் அல்ல: பிரகாஷ் ஜவடேகர் கண்டனம்

Published On 2020-06-05 03:41 GMT   |   Update On 2020-06-05 03:41 GMT
நாட்டு வெடிகுண்டை ஊட்டி கொலை செய்வது இந்திய கலாசாரம் அல்ல. இதை முறையாக விசாரித்து, குற்றவாளிகளை பிடிப்பதில் எந்த வாய்ப்பையும் தவறவிட மாட்டோம் என்று மத்திய சுற்றுச்சூழல் துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.
புதுடெல்லி :

கேரளாவில், அன்னாசி பழத்துக்குள் நாட்டு வெடிகுண்டை வைத்து ஊட்டியதால், ஒரு கர்ப்பிணி யானை, வாய் வெடித்து உயிரிழந்துள்ளது.

இந்நிலையில், இதுகுறித்து மத்திய சுற்றுச்சூழல் துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் தனது ‘டுவிட்டர்’ பதிவில் கூறியிருப்பதாவது:-

யானை கொல்லப்பட்ட சம்பவத்தை மத்திய அரசு தீவிர கவனத்தில் கொண்டுள்ளது. இதை முறையாக விசாரித்து, குற்றவாளிகளை பிடிப்பதில் எந்த வாய்ப்பையும் தவறவிட மாட்டோம். நாட்டு வெடிகுண்டை ஊட்டி கொலை செய்வது இந்திய கலாசாரம் அல்ல.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News