ஆன்மிகம்
பிரத்யங்கிரா தேவி கோவிலில் ஆவணி அமாவாசை நிகும்பலா யாகம்

பிரத்யங்கிரா தேவி கோவிலில் ஆவணி அமாவாசை நிகும்பலா யாகம்

Published On 2021-09-07 06:07 GMT   |   Update On 2021-09-07 06:07 GMT
திருவிசநல்லூரில் உள்ள 12 அடி உயரம் ஐந்து முகத்துடன் பஞ்சமுக மகா மங்கள பிரத்யங்கிரா தேவி கோவிலில் அமாவாசை தோறும் நடைபெறும் மிளகாய் யாகம் பிரசித்தி பெற்றது.
கும்பகோணம் அருகே உள்ள திருவிசநல்லூரில் 12 அடி உயரம் ஐந்து முகத்துடன் பஞ்சமுக மகா மங்கள பிரத்யங்கிரா தேவி கோவில் உள்ளது. இந்த கோவிலில் அமாவாசை தோறும் நடைபெறும் மிளகாய் யாகம் பிரசித்தி பெற்றது. ஆவணி மாத அமாவாசையான நேற்று மிளகாய் யாகமான நிகும்பலா யாகம் நடைபெற்றது.

வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். யாகத்துக்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகி நந்தினி கணேஷ்குமார்குருக்கள் மற்றும் பணியாளர்கள் செய்து இருந்தனர்.
Tags:    

Similar News