செய்திகள்
கைது

பண்ருட்டியில் மனைவிக்கு கொலை மிரட்டல்- வாலிபர் கைது

Published On 2020-10-16 14:08 GMT   |   Update On 2020-10-16 14:08 GMT
திருமண புகைப்படத்தை முகநூலில் பதிவிட்டதை தட்டிக்கேட்ட மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கடலூர்:

பண்ருட்டி வ.உ.சி. தெருவை சேர்ந்தவர் குமார் மகன் விக்னேஷ் (வயது 26). இவருக்கும் கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியை சேர்ந்த சந்தியா(25) என்பவருக்கும் திருமணம் செய்து வைக்க இருவீட்டு பெற்றோரும் முடிவு செய்திருந்தனர். இருப்பினும் அவர்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி, கடந்த ஜனவரி மாதம் வேளாங்கண்ணியில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். 

இந்நிலையில் திருமணம் ஆன சிறிது நாட்களிலேயே விக்னேசின் நடவடிக்கை பிடிக்கவில்லை என்று கூறிவிட்டு சந்தியா, கடலூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று வசித்து வருகிறார். இதற்கிடையே திருமணத்தின் போது எடுத்த புகைப்படத்தை விக்னேஷ் முகநூலில் பதிவிட்டதாக கூறப்படுகிறது. 

இதை பார்த்த சந்தியா, விக்னேசை தட்டிக்கேட்டுள்ளார். அப்போது விக்னேஷ், தன்னுடன் குடும்பம் நடத்த வரவில்லை எனில் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் கடலூர் புதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விக்னேசை கைது செய்தனர்.
Tags:    

Similar News