செய்திகள்
கைது

ஆண்டிப்பட்டி அருகே வாலிபரின் கையை கடித்து மிரட்டியவர் கைது

Published On 2019-10-22 12:43 GMT   |   Update On 2019-10-22 12:43 GMT
ஆண்டிப்பட்டி அருகே வாலிபரின் கையை கடித்து கொலை மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார்.

ஆண்டிப்பட்டி:

ஆண்டிப்பட்டி அருகில் உள்ள குன்னூரை சேர்ந்த சிங்கம் மனைவி மயில் (வயது37). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அக்னிவீரன் (36) என்பருக்கும் கழிவு நீர் வாய்க்கால் செல்லும் பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. சம்பவத்தன்று இது தொடர்பாக அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

மயிலுக்கு ஆதரவாக அவரது சித்தி மகன் சூர்யா ஆனந்த் (19) தட்டி கேட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அக்னிவீரன் சூர்யாவின் இடது கை கட்டை விரலை கடித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

படுகாயம் அடைந்த சூர்யாஆனந்த் க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக மயில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அக்னிவீரனை கைது செய்தனர்.

Tags:    

Similar News