செய்திகள்
கோப்புபடம்

ராயக்கோட்டையில் அதிகரிக்கும் கொரோனா 10 நாட்கள் கடைகளை அடைக்க வணிகர்கள் முடிவு

Published On 2020-09-28 09:30 GMT   |   Update On 2020-09-28 09:30 GMT
ராயக்கோட்டை பகுதியில் கொரோனா அதிகரித்து வருவதால் 10 நாட்கள் கடைகளை அடைக்க வணிகர்கள் முடிவு செய்துள்ளனர்.
ராயக்கோட்டை:

ராயக்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட எச்சம்பட்டி, உடையாண்டஅள்ளி, கொப்பக்கரை, கிருஷ்ணகிரி மற்றும் ஓசூர் மெயின் ரோடு, ரகமத் காலனி, மஜித் தெரு, ராயக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் பரவல் தற்போது அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் வரை 28 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இதில் 22 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.

எச்சம்பட்டி, உடையாண்டஅள்ளி, கோட்டை ஆகிய பகுதியை சேர்ந்த, 5 பேர் தொடர்ந்து சிகிச்சையில் உள்ளனர். ஒருவர் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்த நிலையில், 3 பேர் மர்மமான முறையில் இறந்ததால் கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இதைத்தவிர ராயக்கோட்டை சுற்று வட்டாரத்தில் உள்ள கெலமங்கலம், உத்தனப்பள்ளி, சூளகிரி மற்றும் கிராமப்புறங்களில் கொரோனா வேகமாக பரவி வருகிறது.

குறிப்பாக ராயக்கோட்டை தக்காளி மண்டி மற்றும் மார்க்கெட்டுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கர்நாடக, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் அதிக அளவில் வந்து செல்கிறார்கள். இதன் காரணமாக ராயக்கோட்டை பகுதியில் கொரோனா அதிகமாக பரவி வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இதனால் பொதுமக்கள் அனைவரும் ஒன்றுபட்டு கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்ளும் பொருட்டு வருகிற 1-ந் தேதி முதல் 10-ந்தேதி வரையில் ராயக்கோட்டை ஊராட்சியில் உள்ள அனைத்து கடைகளையும் முழுமையாக மூட ராயக்கோட்டை அனைத்து வணிகர்கள் முடிவு செய்துள்ளனர். இதை பொதுமக்களுக்கு தெரிவிக்கும் வகையில் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டு வருகிறது. அத்தியாவசிய தேவைகளான மருந்து, பால் கடைகளை தவிர மற்ற கடைகளை மூட வணிகர்கள் முடிவு செய்துள்ளனர்.

Tags:    

Similar News