உள்ளூர் செய்திகள்
செல்போன் பேச கொடுக்காதது குற்றமா? வாலிபருக்கு அடி
செல்போன் பேச கொடுக்க மறுத்த வாலிபரை தாக்கிய நபர் கைது செய்யப்பட்டார்.
கோவை:
கோவை தொண்டாமுத்தூரை அடுத்த தேவராயபுரம் பகுதியை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 46). விவசாயி. இவர் நேற்று வெள்ளருகம்பாளையம் விநாயகர் கோவில் அருகே நின்றிருந்தார்.
அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் குணசேகரனிடம் ஒரு போன் செய்ய வேண்டும். உங்களது செல்போனை தாருங்கள் என்றார். குணசேகரன் செல் போனை தர மறுத்தார். இதனால் அவர்களுக்குடையே தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர் அவரை தகாத வார்த்தைகளால் திட்டி அங்கிருந்த மரகட்டையை எடுத்து சரமாரியாக தாக்கினார். பின்னர் கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து சென்றார்.பலத்த காயம் அடைந்த அவர் சத்தம் போட்டார். அவரின் சத்தத்தை கேட்டு அங்கிருந்தவர்கள் வந்து குணசேகரனை மீட்டு தொண்டாமுத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
இதுகுறித்து குணசேகரன் தொண்டாமுத்தூர் போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து வெள்ளருக்காம்பாளையம் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி ஆறுச்சாமி (35) என்பவரை கைது செய்தனர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.