செய்திகள்
முதல்வர் பழனிசாமி

சிலிண்டர் வெடித்த விபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ 2 லட்சம் நிதியுதவி- முதல்வர் பழனிசாமி

Published On 2020-11-15 08:11 GMT   |   Update On 2020-11-15 08:11 GMT
ஆரணி புதுகாமூர் ரோட்டில் சிலிண்டர் வெடித்ததில் உயிரிழந்த 3 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ 2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
ஆரணி:

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே புதுகாமூர் ரோடு பகுதியில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில் 3 வீடுகள் இடிந்து விழுந்தது.

இந்த விபத்தில் 8 வயது சிறுவன், பெண் உட்பட 3 பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் விபத்தில் படுகாயமடைந்த 5 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் சிலிண்டர் வெடித்ததில் உயிரிழந்த 3 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ 2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும் தீ விபத்தில் படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ. 1 லட்சமும், சாதாரண காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50, 000 ஆயிரமும் நிதி அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News