உள்ளூர் செய்திகள்
.

வேப்பனப்பள்ளியில் 3 மணி நேரத்திற்கும் மேலாக கொட்டி தீர்த்த கனமழை

Published On 2022-04-17 07:31 GMT   |   Update On 2022-04-17 07:31 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளியில் 3 மணி நேரத்திற்கும் மேலாக கொட்டி தீர்த்த கனமழை கொட்டி தீர்த்தது.
வேப்பனப்பள்ளி,

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் காலை முதலே வானம் மேக மூட்டமாக காணப்பட்டது. இந்த நிலையில் மாலை 5 மணிக்கு பலத்த காற்றுடன் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய தொடங்கியது.

தொடர்ந்து 3 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இந்த கனமழையால் வேப்பனப்பள்ளி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வயல்களிலும் குளம் குட்டை ஏரிகளில் நீர் நிரம்பியது. சில நாட்களாக வெப்பம் வாட்டி வைத்து வந்த நிலையில் நேற்று 3 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால் இந்த இப்பகுதியில் குளிர்ந்த சீதோஷ்ண நிலை ஏற்பட்டுள்ளது. 

மேலும் கடந்த 2 மாதங்களாக தண்ணீரின்றி காய்ந்து கிடந்த ஏரிகள், குளங்கள் தற்போது இந்த மழையால் வேகமாக நிரம்பி வருகிறது. இதனால் இப்பகுதி விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Tags:    

Similar News