உள்ளூர் செய்திகள்
சாலை விபத்தில் கட்டிட ஒப்பந்ததாரர் பலி
பெரம்பலூர் அருகே சாலை விபத்தில் கட்டிட ஒப்பந்ததாரர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை சேர்ந்தவர் பழனி மகன் சத்தியநாதன் (வயது 34). கட்டிட ஒப்பந்ததாரரான இவர், சம்பவத்தன்று பெரம்பலூரில் இருந்து திருச்சிக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்றுவிட்டு, இரவு ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார்.
சிறுவாச்சூர் சர்வீஸ் சாலை அருகே வந்தபோது, அங்கு தார்ச்சாலை அமைக்கும் பணி நடைபெறுவதை பார்த்த சத்தியநாதன், வாகனத்தின் வேகத்தை குறைப்பதற்கு முயற்சி செய்தார்.
அப்போது, எதிர்பாராதவிதமாக அருகில் இருந்த வேகத்தடைக்காக வைக்கப்பட்டிருந்த பேரிக்கார்டில் மோதினார். இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த சத்தியநாதன், தலையில் பலத்த காயம் அடைந்து, ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேய பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்துக் குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார், விரைந்து சென்று சத்தியநாதனின் உடலை கைப்பறி விசாரணை நடத்தி வருகின்றனர்.