செய்திகள்
திருநின்றவூரில் பழங்குடியினருடன் கல்லூரி மாணவர்கள் புத்தாண்டு கொண்டாட்டம்
ஜெயா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் சார்பில் கல்பேடு அருகில் பழங்குடிகளான இருளர் இன மக்களுடன் புத்தாண்டை கொண்டாடினர்.
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த திருநின்றவூர் ஜெயா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் சார்பில் கல்பேடு அருகில் பழங்குடிகளான இருளர் இன மக்களுடன் புத்தாண்டை கொண்டாடினர்.
இந்த நிகழ்ச்சியில் ஜெயா கல்வி குழுமங்களின் தலைவரும், ஜெயா கல்வி அறக்கட்டளையின் தலைவருமான பேராசிரியர் முனைவர் அ.கனகராஜ், கல்லூரி முதல்வர் குகன், துணை முதல்வர் விஜயகுமார் ஆகியோர் இருளர் இன மக்களுக்கு புத்தாடை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.
இந்நிகழ்வில் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் சுதா, காளிராஜ், சமூக ஆர்வலர்கள் ஹரி, ஆனந்த் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.