செய்திகள்
ஆட்சிமாற்றம் ஏற்பட வேண்டும் எனும் ஆர்வம் மக்களிடத்தில் அதிகம் உள்ளது- முத்தரசன்
மக்களின் இந்த மிகுந்த ஆர்வம் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்ற எண்ணத்தை மனநிலையை காட்டுகிறது.
திருத்துறைப்பூண்டி:
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவை தொகுதி வேலூர் கிராமத்தில் அரசு உதவி பெறும் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச் சாவடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தனது குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் பேசுகையில் கூறியதாவது:-
காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கினாலும் முன்னதாகவே பொதுமக்கள் வாக்களிக்க ஆர்வத்துடன் வருகை தந்துள்ளனர். மக்களின் இந்த மிகுந்த ஆர்வம் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்ற எண்ணத்தை மனநிலையை காட்டுகிறது. தி.மு.க. கூட்டணி இந்த தேர்தலில் மகத்தான வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.