செய்திகள்
அன்னை இல்லத்தில் பிரார்த்தனையில் ஈடுபட்ட கன்னியாஸ்திரிகள்

அன்னை தெரசா நினைவு நாள்- அன்னை இல்லத்தில் சிறப்பு பிரார்த்தனை

Published On 2020-09-05 03:50 GMT   |   Update On 2020-09-05 03:50 GMT
அன்னை தெரசாவின் நினைவு நாளை முன்னிட்டு கொல்கத்தாவில் உள்ள அன்னை இல்லத்தில் கன்னியாஸ்திரிகள் சிறப்பு பிரார்த்தனை மேற்கொண்டனர்.
கொல்கத்தா:

குழந்தைகள், கைவிடப்பட்டோர் மற்றும் தொழுநோயாளிகள் மீது அன்பு காட்டி, அவர்களுக்கு மருத்துவ சேவையாற்றி மக்கள் மனதில் நீங்கா இடம்பெற்ற அன்னை தெரசாவின் நினைவு நாள் இன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. அவர் பெயரில் இயங்கும் அமைப்புகள் மற்றும் அறக்கட்டளைகளில் பிரார்த்தனைகள் மற்றும் அஞ்சலி நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

அவ்வகையில், கொல்கத்தாவில் உள்ள அன்னை இல்லத்தில் பிரார்த்தனை செய்யப்பட்டது. அலங்கரிக்கப்பட்ட அன்னை தெரசாவின் கல்லறையில் கன்னியாஸ்திரிகள் பிரார்த்தனை செய்தும், பாடல்களை பாடியும் அஞ்சலி செலுத்தினர். 

தன்னலமற்ற சேவைக்காக மகசேசே விருது,  ஜான் எஃப் கென்னடியின் சர்வதேச விருது,  அமைதிக்கான நோபல் பரிசு உள்ளிட்ட விருதுகள் பெற்ற அன்னை தெரசா 1997ம் ஆண்டு செப்டம்பர் 5ம் நாள் கொல்கத்தாவில் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News