செய்திகள்
விபத்து

சின்னசேலம் அருகே விபத்து- என்ஜினீயரிங் பட்டதாரி மாணவர் பலி

Published On 2021-07-18 10:16 GMT   |   Update On 2021-07-18 10:16 GMT
சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ரெயில்வே மேம்பாலம் அருகே சிறு பாலத்தின் தடுப்பு சுவரின் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் என்ஜினீயரிங் பட்டதாரி மாணவர் உயிரிழந்தார்.
சின்னசேலம்:

சேலம் மாவட்டம், ஓமலூர் ஆணைக் கவுண்டம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் மகன் பிரபாகரன் (வயது 20).  சேலம் காமலாபுரம் தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வந்தார்.

இவர் தனது நண்பனின் திருமணத்திற்கு சேலத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் மேல்மருவத்தூர் சென்று இரவு வீடு திரும்பி கொண்டு இருந்தார்.

அப்போது சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ரெயில்வே மேம்பாலம் அருகே சிறு பாலத்தின் தடுப்பு சுவரின் மீது மோதி விபத்துக்குள்ளாகி பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார்.

இதுபற்றி தகவல் அறிந்த சின்ன சேலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் விபத்தில் இறந்து கிடந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News