செய்திகள்
விருப்ப மனு வழங்கும் அதிமுகவினர்

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் - அதிமுக சார்பில் விருப்ப மனு விநியோகம் தொடங்கியது

Published On 2019-09-22 06:23 GMT   |   Update On 2019-09-22 06:23 GMT
நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்காக அ.தி.மு.க. சார்பில் விருப்ப மனு விநியோகம் இன்று காலை தொடங்கியது.
சென்னை:

தமிழகத்தில் காலியாக உள்ள விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதிகளுக்கு அக்டோபர் 21-ல் இடைத்தேர்தல் நடைபெறும் என தலைமை  தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நேற்று அறிவித்தார்.

இடைத்தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலில் வந்தன. இடைத்தேர்த்லுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை தொடங்கி 30-ம் தேதி முடிவடைகிறது. 

இதற்கிடையே, நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் கட்சி தலைமை அலுவலகத்தில் விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம். வேட்பாளர் நேர்காணல் நாளை நடைபெறும் என அ.தி.மு.க. கட்சி தலைமை அறிவித்திருந்தது.

இந்நிலையில், நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்காக அ.தி.மு.க. சார்பில் விருப்ப மனு விநியோகம் இன்று காலை தொடங்கியது.

நாங்குநேரி தொகுதியில் முன்னாள் எம்.பி. மனோஜ் பாண்டியன் மற்றும் விக்கிரவாண்டி தொகுதியில் முன்னாள் எம்.பி. ஆர். லெட்சுமணன் ஆகியோர் விருப்ப மனு தாக்கல் செய்தனர்.
Tags:    

Similar News