ஆட்டோமொபைல்
சுசுகி ஜிக்சர் 250

குருகிராம் ஆலையில் புதிய மைல்கல் எட்டிய சுசுகி

Published On 2020-07-15 05:30 GMT   |   Update On 2020-07-15 05:30 GMT
சுசுகி நிறுவனம் தனது குருகிராம் உற்பத்தி ஆலையில் புதிய மைல்கல் எட்டியுள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.

சுசுகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனம் தனது குருகிராம் ஆலையில் ஐம்பது லட்சம் வாகனங்கள் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது. சுசுகி குருகிராம் ஆலையில் 50 லட்சமாவது வாகனமாக சுசுகி ஜிக்சர் எஸ்எஃப் 250 பிஎஸ்6 மாடல் வெளியிடப்பட்டு இருக்கிறது.

இந்தியாவில் சுசுகி நிறுவனம் தற்சமயம் ஐந்து மோட்டார்சைக்கிள் மற்றும் இரண்டு ஸ்கூட்டர்களை உற்பத்தி செய்து இருக்கிறது. இதில் ஜிக்சர், ஜிக்சர் எஸ்எஃப், ஜிக்சர் 250, ஜிக்சர் எஸ்எஃப் 250, இன்ட்ரூடர், அக்சஸ் 125 மற்றும் பர்க்மேன் ஸ்டிரீடர் உள்ளிட்டவை அடங்கும். 



சுசுகி நிறுவனம் தனது பிஎஸ்6 ரக வி ஸ்டாம் 650 எக்ஸ்டி மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்திய சந்தையில் வேகமாக வளர்ந்து வரும் இருசக்கர வாகன நிறுவனமாக சுசுகி மோட்டார்சைக்கிள் இந்தியா இருக்கிறது. 2018-19 நிதியாண்டு சுசுகி நிறுவனம் இந்திய சந்தையில் 5 சதவீத வளர்ச்சியை பதிவு செய்தது.  
Tags:    

Similar News