செய்திகள்
கொரோனா வைரஸ்

தஞ்சை மாவட்டத்தில் மேலும் 2 பள்ளிகளை சேர்ந்த 7 மாணவர்களுக்கு கொரோனா உறுதி

Published On 2021-03-24 09:24 GMT   |   Update On 2021-03-24 09:24 GMT
தஞ்சை மாவட்டத்தில் ஏற்கனவே 11 பள்ளிகள் மற்றும் 3 கல்லூரிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் என 198 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர்.
தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்டத்தில் ஏற்கனவே 11 பள்ளிகள் மற்றும் 3 கல்லூரிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் என 198 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் புதிதாக திருப்பனந்தாளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியை சேர்ந்த 3 மாணவர்களுக்கும், திருவையாறு தனியார் பள்ளி மாணவர்கள் 4 பேர் என 7 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டது .

இதனையடுத்து பாதிக்கப்பட்ட பள்ளி 13 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள் எண்ணிக்கை 205ஆக அதிகரித்துள்ளது.
Tags:    

Similar News