செய்திகள்
தற்கொலை

வில்லியனூர் அருகே முதியவர் தூக்குபோட்டு தற்கொலை

Published On 2020-01-13 11:49 GMT   |   Update On 2020-01-13 11:49 GMT
வில்லியனூர் அருகே உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்த முதியவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வில்லியனூர்:

வில்லியனூர் அருகே கரிக்கலாம்பாக்கம் நேரு நகரை சேர்ந்தவர் கோதண்டராமன் (வயது63). இவர் கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தார். ஆஸ்பத்திரியில் காண்பித்தும் நோய்குணமாக இல்லை.

இந்த நிலையில் நேற்று காலை கோதண்ட ராமனுக்கு நோய் கொடுமை அதிகமானதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த கோதண்டராமன் குடும்பத்தினருக்கு தொல்லை கொடுக்க கூடாது என்ற எண்ணத்தில் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். வீட்டில் அவர் நைலான் கயிற்றால் தூக்குபோட்டு தொங்கினார்.

உடனே கோதண்டராமனை அவரது குடும்பத்தினர் மீட்டு கரிக்கலாம்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே கோதண்டராமன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து அவரது மகன் குமரன் கொடுத்த புகாரின் பேரில் மங்களம் போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

Tags:    

Similar News