செய்திகள்
அபராதம்

சுரண்டையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ரூ.13 ஆயிரம் அபராதம் வசூல்

Published On 2021-06-08 09:32 GMT   |   Update On 2021-06-08 09:32 GMT
சுரண்டை பஜாரில் கொரோனா விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா? ஊரடங்கு விதிமீறல்கள் நடந்துள்ளதா? என அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

சுரண்டை:

கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில் நேற்று சுரண்டை பஜாரில் கொரோனா விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா? ஊரடங்கு விதிமீறல்கள் நடந்துள்ளதா? என அதிகாரிகள் ஆய்வு செய்தனர். 

அப்போது முககவசம் அணியாமல் சென்ற 2 பேருக்கும், சமூக இடைவெளியை கடைபிடிக்காத 5 கடைகளுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் அரசு வகுத்துள்ள விதிமுறைகளை மீறி செயல்பட்ட 2 தனியார் பேங்கர்ஸ் நிறுவனங்களுக்கு தலா ரூ.5000 அபராதம் விதித்தனர். மொத்தம் அபராதமாக ரூ.12,900 வசூலிக்கப்பட்டது.

Tags:    

Similar News