ஆன்மிகம்
தீர்த்தக்கிணறுகள், தரிசனத்துக்கு விதித்த தடையால் ராமேசுவரம் கோவில் வெறிச்சோடியது

தரிசனத்துக்கு தடையால் ராமேசுவரம் கோவில் வெறிச்சோடியது

Published On 2021-04-27 07:51 GMT   |   Update On 2021-04-27 07:51 GMT
ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்படவில்லை. அதுபோல் கோவிலில் உள்ள 22 தீர்த்த கிணறுகளில் நீராடவும் மீண்டும் தடை விதிக்கப்பட்டது.
ராமேசுவரம் :

தமிழகம் முழுவதும் கொரோனா 2-வது அலை பரவலை தடுக்கும் விதமாக தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதுபோல் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி கிடையாது என்றும் அரசு அறிவித்தது.

இந்த உத்தரவு நேற்று நடைமுறைக்கு வந்ததை தொடர்ந்து ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் நேற்று முதல் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்படவில்லை. அதுபோல் கோவிலில் உள்ள 22 தீர்த்த கிணறுகளில் நீராடவும் நேற்று முதல் மீண்டும் தடை விதிக்கப்பட்டது.



இதனால் கோவிலின் உள்ளே சுவாமி, அம்பாள் சன்னதி பிரகாரங்கள், பிரசித்தி பெற்ற 3-ம் பிரகாரம் உள்ளிட்ட அனைத்து சன்னதிகளும் பக்தர்கள் இல்லாமல் கோவிலின் உட்பகுதி முழுவதும் வெறிச்சோடியே காணப்பட்டன.

ராமேசுவரத்திற்கு நேற்று மிகவும் குறைவானவர்களே வந்திருந்தனர். அவ்வாறு வந்த பக்தர்கள் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி விட்டு கோவிலின் வாசல் பகுதியில் நின்று சாமியை தரிசனம் செய்துவிட்டு மிகுந்த ஏமாற்றத்துடன் சென்றனர். கோவிலில் தினமும் சுவாமிக்கு நடைபெறும் 6 கால பூஜைகள் வழக்கம் போல் நடைபெற்றன.
Tags:    

Similar News