செய்திகள்
மோட்டார் சைக்கிள் வாங்க முடியாததால் விரக்தி- விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
மோட்டார் சைக்கிள் வாங்க முடியாததால் விரக்தியடைந்த வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே கேத்தியை சேர்ந்த சண்முகம் என்பவரது மகன் சின்னான் (வயது 22). இவர் கூலி வேலை செய்து வந்தார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. தனக்கு மோட்டார் சைக்கிள் வாங்க வேண்டும் என்று பெற்றோரிடம் கேட்டு உள்ளார். ஆனால் அவர்கள் பணம் இல்லை என்று கூறியதாக தெரிகிறது.
மேலும் தன்னால் மோட்டார் சைக்கிள் வாங்கி தரமுடியவில்லையே என்று மனவேதனையுடன் காணப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் விரக்தி அடைந்த அவர் கடந்த 1-ந் தேதி மதுபானத்தில் பூச்சி மருந்து கலந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். மயங்கி விழுந்த அவரை உறவினர்கள், அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்தரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி சின்னான் இறந்தார். இதுகுறித்து கேத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே கேத்தியை சேர்ந்த சண்முகம் என்பவரது மகன் சின்னான் (வயது 22). இவர் கூலி வேலை செய்து வந்தார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. தனக்கு மோட்டார் சைக்கிள் வாங்க வேண்டும் என்று பெற்றோரிடம் கேட்டு உள்ளார். ஆனால் அவர்கள் பணம் இல்லை என்று கூறியதாக தெரிகிறது.
மேலும் தன்னால் மோட்டார் சைக்கிள் வாங்கி தரமுடியவில்லையே என்று மனவேதனையுடன் காணப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் விரக்தி அடைந்த அவர் கடந்த 1-ந் தேதி மதுபானத்தில் பூச்சி மருந்து கலந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். மயங்கி விழுந்த அவரை உறவினர்கள், அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்தரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி சின்னான் இறந்தார். இதுகுறித்து கேத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.