செய்திகள்
கொரோனா வைரஸ்

புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக 113 பேருக்கு கொரோனா தொற்று

Published On 2021-05-04 11:28 GMT   |   Update On 2021-05-04 11:28 GMT
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று புதிதாக 113 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 156 ஆக அதிகரித்துள்ளது.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று புதிதாக 113 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 156 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா சிகிச்சையில் இருந்து 152 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 139 ஆக உயர்ந்தது. கொரோனாவுக்கு தற்போது 854 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் கொரோனாவுக்கு இறப்பு எண்ணிக்கை 163 ஆக உள்ளது.

இதேபோல் அரிமளம் ஒன்றியம் நாட்டாம்பட்டி கிராமத்தை சேர்ந்த 60 வயது பெண் கே.ராயவரம் கிராமத்தை சேர்ந்த 18 வயது இளைஞர், கடையக்குடி அருகே உள்ள வலையன் வயல் கிராமத்தை சேர்ந்த 33 வயது ஆண், கடியாபட்டி போஸ்ட் ஆபீஸ் வீதியை சேர்ந்த 49 வயது பெண், ராயவரம் கிராமத்தை சேர்ந்த 64 வயது ஆண் ஆகிய 5 பேருக்கு நேற்று கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
Tags:    

Similar News