ஆன்மிகம்
குற்றாலம் குற்றாலநாதர் கோவிலில் பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை

குற்றாலம் குற்றாலநாதர் கோவிலில் பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை

Published On 2020-10-16 05:20 GMT   |   Update On 2020-10-16 05:20 GMT
குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோவிலில் ஐப்பசி விசு திருவிழாவை முன்னிட்டு நடராஜருக்கு பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை நடைபெற்றது.
குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோவிலில் ஐப்பசி விசு திருவிழா கடந்த 8-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சிறப்பு பூஜைகள், தாண்டவ தீபாராதனை நடைபெற்று வருகிறது.

கொரோனா காரணமாக அனைத்து நிகழ்ச்சிகளும் கோவில் வளாகத்திற்கு உள்ளேயே நடைபெறுகிறது. திருவிழாவின் 8-வது நாளான நேற்று நடராஜருக்கு பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை நடைபெற்றது. நாளை விசு தீர்த்தவாரியுடன் திருவிழா முடிவடைகிறது.
Tags:    

Similar News