உள்ளூர் செய்திகள்
பச்சிளம் குழந்தை.

குப்பை தொட்டியில் குழந்தை உடல் மீட்பு

Published On 2022-04-16 10:30 GMT   |   Update On 2022-04-16 10:30 GMT
மதுரை தெப்பக்குளம் பள்ளி அருகே குப்பை தொட்டியில் பச்சிளம் குழந்தை உடல் மீட்கப்பட்டது.
மதுரை

மதுரை தெப்பக்குளம் சவுராஷ்டிரா பள்ளிக்கூடம் அருகே குப்பை தொட்டியில் பெண்சிசுவின் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. 

தெப்பக்குளம் போலீசார் சம்பவஇடத்திற்கு சென்று சோதனை செய்தனர். அந்த குப்பைதொட்டியில் பிறந்து சில மணி நேரங்களே ஆன பெண் குழந்தை உடல் சிதைந்த நிலையில் தொப்புள் கொடியுடன் கிடந்தது. குழந்தையின் தலை சிலை சிதைக்கப்பட்டு இருந்தது. வலது கையிலும் சிதைவுகள் காணப்பட்டன. இடது கையில் நடுவிரல் இல்லை. பிறந்து சிலமணி நேரமே ஆன நிலையில் பெண் சிசுவை குப்பைத்தொட்டியில் வீசிச்சென்றது யார்? என்று தெரியவில்லை. 

இதுதொடர்பாக தெப்பக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அங்கு பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு காமிரா பதிவுளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். அந்த பகுதியில் கர்ப்பிணியாக இருந்த பெண்கள் பற்றிய விவரமும் சேகரிக்கப்பட்டு வருகிறது.
Tags:    

Similar News