செய்திகள்
கோப்புபடம்

பழையகோட்டை சந்தையில் ரூ.12 லட்சத்துக்கு காங்கேயம் இன காளைகள் விற்பனை

Published On 2021-11-22 09:38 GMT   |   Update On 2021-11-22 09:38 GMT
விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட மொத்தம் 80 காங்கேயம் இன காளைகள், பசுமாடுகளில் மொத்தம் 38 நாட்டு பசுமாடுகள், காளைகள், கன்றுகள் விறுவிறுப்பாக விற்பனை செய்யப்பட்டது.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டம் நத்தக்காடையூர் அருகே உள்ள பழையகோட்டை மாட்டுத்தாவணியில் உலகிலேயே வீரத்திற்கும், கம்பீரத்திற்கும் உலக புகழ் பெற்ற காங்கேயம் இன காளைகள், கன்றுகள், பசுமாடுகள் விற்பனை சந்தை வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று வருகிறது. 

இந்த நிலையில் கொரோனா வைரஸ் 2வது அலை பரவுதல் தடுப்பு ஊரடங்கு உத்தரவுக்கு பிறகு 18வது வாரமாக நேற்று காலை வழக்கம்போல் திறக்கப்பட்டது.

இந்த சந்தையில் திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், கோவை, திருச்சி, திண்டுக்கல் உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த காங்கேயம் இன காளைகள் வளர்ப்போர்கள், நாட்டு மாடுகளை வளர்க்கும் விவசாயிகள், காங்கேயம் இன காளை பராமரிப்பு விருத்தியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். 

இந்த காங்கேயம் இன கால்நடை விற்பனை சந்தையில் நேற்று காங்கேயம் இன பசுமாடுகளை வாங்குவதற்கு விவசாயிகள், வியாபாரிகள் தமிழக அரசின் கொரோனா தடுப்பு விதிகளை கடைபிடித்து, முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் அதிக ஆர்வத்துடன் நேரில் திரண்டு வந்து கலந்து கொண்டனர். 

இதன்படி இந்த சந்தையில் நேற்று விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட மொத்தம் 80 காங்கேயம் இன காளைகள், பசுமாடுகளில் மொத்தம் 38 நாட்டு பசுமாடுகள், காளைகள், கன்றுகள் விறுவிறுப்பாக விற்பனை செய்யப்பட்டது.

இதன்படி சந்தையில் அதிகபட்சமாக காங்கேயம் இன கிடாரி கன்றுடன் செவலை பசுமாடு ரூ.95 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டது. 

மேலும் சந்தையில் காங்கேயம் இன இளங்கன்றுகள் ஆரம்ப விலையாக ரூ.34 ஆயிரம் முதல் விற்பனை செய்யப்பட்டது. இதன்படி நேற்று மட்டும் ஒரே நாளில் இந்த சந்தையில் மொத்தம் ரூ.12 லட்சத்துக்கு காங்கேயம் இன காளைகள், கன்றுகள், மாடுகள் விற்பனை செய்யப்பட்டது.
Tags:    

Similar News