ஆன்மிகம்
மருதமலை முருகன் கோவில்

மகாளய அமாவாசை: மருதமலை முருகன் கோவில் உள்பட 4 கோவில்களில் தரிசனத்துக்கு தடை

Published On 2021-10-05 04:53 GMT   |   Update On 2021-10-05 04:53 GMT
தற்போது கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக கோவையில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோவில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி மாசாணியம்மன், மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன், பேரூர் பட்டீஸ்வரர், மருதமலை முருகன் கோவில் உள்ளிட்ட பிரசித்தி பெற்ற கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களுக்கு கோவை மாவட்டத்தை சார்ந்தவர்கள் மட்டுமின்றி அருகே உள்ள திருப்பூர், ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள்.

அதுவும் விசே‌ஷ தினங்களில் இந்த 4 கோவில்களிலும் கட்டுக்கடங்காத வகையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

தற்போது கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக கோவையில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோவில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் விடுமுறை தினங்களில் கோவில்களுக்கு சென்று சாமியை தரிசிக்க முடியாமல் பக்தர்கள் கவலை அடைந்துள்ளனர்.

நாளை மகாளய அமாவாசை தினம் கடைபிடிக்கப்படுகிறது. அன்றைய தினம் ஏராளமான பக்தர்கள் தங்கள் முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுப்பதற்காக கோவில்கள், நீர்நிலைகளுக்கு வருவது வழக்கம்.

இந்த நிலையில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாகவும், பக்தர்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் பொருட்டு, கோவையில் உள்ள 4 கோவில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கலெக்டர் சமீரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கொரோனா தொற்று பரவமால் இருக்கவும், கூட்டம் கூடுவதை தவிர்க்கவும் நாளை(புதன்கிழமை) மகாளய
அமாவாசை
யன்று கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில், மருதமலை முருகன் கோவில், தேக்கம்பட்டி வனபத்ரகாளியம்மன் கோவில், பொள்ளாச்சி மாசாணியம்மன் கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்யவும், ஆற்றோரங்களில் திதி மற்றும் தர்ப்பணம் கொடுக்கவும் அனுமதியில்லை.

ஆனால் இந்த கோவில்களில் வழக்கமான பூஜைகள் நடைபெறும். பொதுமக்கள் விதிமுறைகளை கடைபிடிக்கிறார்களா? என்பதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News