செய்திகள்
கோப்பு படம்.

நாளை முதல் முழு ஊரடங்கு - சென்னையில் பாதுகாப்புப் பணியில் 10,000 போலீசார்

Published On 2021-05-09 15:31 GMT   |   Update On 2021-05-09 15:31 GMT
நாளை முதல் முழு ஊரடங்கு தொடங்குவதையொட்டி பாதுகாப்புப் பணியில் 10,000 போலீசார் ஈடுபட உள்ளதாக சென்னை காவல்துறை ஆணையம் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
சென்னை:

தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், நாளை (மே 10) முதல் 24ம் தேதி வரையிலான 15 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட இருக்கிறது. 

இந்நிலையில், நாளை முதல் முழு ஊரடங்கு அமலாக உள்ள நிலையில் சென்னை முழுவதும் 10,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர் என்று சென்னை காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் கூறியுள்ளார்.

மேலும் 200 இடங்களில் தடுப்புகள் அமைத்து கண்காணிப்பு நடைபெறும் என்றும், பொதுமக்களிடம் காவல்துறையினர் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கி உள்ளார். 
Tags:    

Similar News