செய்திகள்
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள்.

சத்துணவு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2021-09-13 11:01 GMT   |   Update On 2021-09-13 11:01 GMT
சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.7,850 வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
திருப்பூர்:

திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.7,850 வழங்க வேண்டும்,ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி, குடும்ப ஓய்வூதியம், மருத்துவப்படி, இலவச பேருந்து பயண அட்டை, குடும்ப நல நிதி உள்ளிட்டவற்றை வழங்கி வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Tags:    

Similar News