செய்திகள்
தேடுதல் வேட்டை

மகாராஷ்டிர வனப்பகுதியில் என்கவுண்டர்- 26 மாவோயிஸ்டுகளை சுட்டுக்கொன்றது போலீஸ் படை

Published On 2021-11-13 14:46 GMT   |   Update On 2021-11-13 14:46 GMT
மும்பையில் இருந்து 900 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கட்சிரோலி வனப்பகுதியில் நடந்த துப்பாக்கி சண்டையில் 26 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர்.
நாக்பூர்/மும்பை:

மகாராஷ்டிராவின் கட்சிரோலி மாவட்டத்தில் உள்ள மார்டின்டோலா வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ஆயுதம் தாங்கிய கமாண்டோ போலீசார் அந்த பகுதிக்கு சென்று சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 

அப்போது, கோர்சி பகுதியில் தேடுதல் வேட்டையின்போது அங்கு பதுங்கியிருந்த மாவோயிஸ்டுகள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். போலீசாரும் பதிலடி கொடுத்தனர். இந்த துப்பாக்கிச் சண்டையில் 26 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர். அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 

காவல்துறை தரப்பில் 4 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவர்கள்  உடனடியாக ஹெலிகாப்டர் மூலம் நாக்பூர் கொண்டு செல்லப்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். 

இன்று என்கவுண்டர் நடந்த கட்சிரோலி மாவட்டமானது, மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் நிறைந்த சத்தீஸ்கர் மாநிலத்தின் எல்லைப்பகுதியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News