செய்திகள்
கோப்புபடம்

ஆரணி அருகே மரத்தில் இருந்து கீழே விழுந்த விவசாயி பலி

Published On 2021-04-11 09:24 GMT   |   Update On 2021-04-11 09:24 GMT
ஆரணி அருகே மரத்தில் இருந்து கீழே விழுந்த விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
ஆரணி:

ஆரணியை அடுத்த ராந்தம் கொரட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 45), விவசாயி. இவர், தனது நிலத்தில் உள்ள மரத்தில் ஏறியுள்ளார். அப்போது மரத்தில் இருந்து தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து ஆரணி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

இறந்த சீனுவாசனுக்கு மகேஸ்வரி என்ற மனைவியும், 3 மகள்களும் உள்ளனர்.
Tags:    

Similar News