ஆன்மிகம்
சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதி

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் திருக்கல்யாண நிகழ்ச்சி

Published On 2019-12-21 04:42 GMT   |   Update On 2019-12-21 04:42 GMT
சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் திருஏடு வாசிப்பு விழாவின் 15-ம் நாளான நேற்று திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது.
சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதம் 17 நாட்கள் திருஏடு வாசிப்பு திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த வருட திருஏடு வாசிப்பு விழா தொடங்கி நடந்து வருகிறது.

விழாவின் 15-ம் நாளான நேற்று திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. இதனையொட்டி நேற்று அதிகாலை 4 மணிக்கு நடை திறத்தலும், 5 மணிக்கு அய்யாவுக்கு சிறப்பு பணிவிடையும், மாலை 5 மணிக்கு வாகன பவனியும் நடைபெற்றது. இரவு 9 மணிக்கு திருக்கல்யாண ஏடு வாசிப்பு தொடங்கியது.

நிகழ்ச்சியையொட்டி தலைமைப்பதி பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இரவு 10 மணிக்கு அய்யா வைகுண்ட சாமிக்கு பழங்கள், பூக்கள், இனிப்புகள் ஆகியவற்றை பெண்கள் கல்யாண சீர்வரிசையாக கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருக்கல்யாண நிகழ்ச்சியில் பல மாவட்டங்களை சேர்ந்த அய்யா வழி பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News