செய்திகள்
விபத்து பலி

கெரகோடஅள்ளி அருகே லாரி மோதி தொழிலாளி பலி

Published On 2021-02-23 02:39 GMT   |   Update On 2021-02-23 02:39 GMT
கெரகோடஅள்ளி அருகே லாரி மோதி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரிமங்கலம்:

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த கெரகோடஅள்ளி பகுதியை சேர்ந்தவர் குமரேசன் (வயது 45). கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு காரிமங்கலத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தார். கெரகோடஅள்ளி பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது மோட்டார் சைக்கிளுடன் சாலையில் நிலைதடுமாறி அவர் கீழே விழுந்தார். அப்போது பின்னால் வந்த லாரி அவர் மீது ஏறியது. இதில் குமரேசன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து காரிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News