செய்திகள்
கொலை

வி.கே. புரத்தில் தொழிலாளி அடித்து கொலை?

Published On 2019-10-20 17:33 GMT   |   Update On 2019-10-20 17:33 GMT
வி.கே. புரத்தில் உடலில் காயங்களுடன் தொழிலாளி இறந்து கிடந்தார். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நெல்லை:

 நெல்லை மாவட்டம் வி.கே. புரம் அருகே உள்ள அயன்திருவாலீஸ்வரத்தை சேர்ந்தவர் தங்கபாண்டி. இவரது மகன் மணிகண்டன் (வயது 31). இவர் வயலுக்கு மருந்தடிக்கும் தொழில் செய்து வந்தார். நேற்று வழக்கம் போல வேலைக்கு சென்றார். ஆனால் மாலை நீண்ட நேரமாகியும் மணிகண்டன் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் அக்கம் பக்கம், உறவினர் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடினர். எனினும் அவர் கிடைக்கவில்லை. 

இந்நிலையில் அப்பகுதியில் உள்ள ஒரு வயலில் உடலில் காயங்களுடன் மணிகண்டன் இறந்து கிடந்தார். இது குறித்து தகவலறிந்த வி.கே. புரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பலியாகி கிடந்த மணிகண்டன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அம்பை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மணிகண்டன் எப்படிஇறந்தார்? அவரது உடலில் காயங்கள் இருப்பதால் அவரை யாரேனும் அடித்து கொலை செய்தனரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News