செய்திகள்
கைது

கோவை அருகே 3 கொள்ளையர்கள் கைது

Published On 2020-10-18 08:03 GMT   |   Update On 2020-10-18 08:03 GMT
கோவை அருகே 3 கொள்ளையர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை வெள்ளலூர் செட்டிபாளையம் ரோட்டில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர் அப்போது சந்தேகத்திற்கிடமாக நடந்து வந்த பிரவீன் என்ற டக்லஸ் (வயது26), சிவானந்தா காலனி சேர்ந்த சிவா என்ற உதயகுமார் (22), ரத்தினபுரியை சேர்ந்த கிறிஸ்டோபர் (24) ஆகிய 3 பேரை மடக்கி பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள் வழிப்பறி, திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர்.
Tags:    

Similar News