செய்திகள்
கூடங்குளம் அணு உலை

தொழில்நுட்ப கோளாறு: கூடங்குளம் 2-வது அணுஉலையில் மின் உற்பத்தி திடீர் நிறுத்தம்

Published On 2021-11-20 03:33 GMT   |   Update On 2021-11-20 03:33 GMT
2-வது அணுஉலையில் மின் உற்பத்தி நடைபெற்று வந்த நிலையில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.
நெல்லை:

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் தலா 1,000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. மேலும், அங்கு 4 அணுஉலைகள் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.

இந்த நிலையில் 2-வது அணுஉலையில் மின் உற்பத்தி நடைபெற்று வந்த நிலையில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் அங்கு மின்உற்பத்தி பணிகள் நிறுத்தப்பட்டன. இதன் காரணமாக அங்கு நடந்து வந்த 1,000 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News