உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

உடுமலை அருகே விபத்தில் வாலிபர் பலி

Published On 2022-05-05 05:41 GMT   |   Update On 2022-05-05 05:41 GMT
சின்னவீரன்பட்டி அருகே வந்த போது சாலையில் வலதுபுறமாக அதிவேகமாக திரும்பிய கார் ஞானசேகரனின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது
உடுமலை:

பொள்ளாச்சியையடுத்த ஜி சங்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரம், கூலித்தொழிலாளி. இவரது மகன் ஞானசேகரன் (வயது 21). திருமணமாகாத இவர் உடுமலையில் உள்ள வணிக நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று காலை ஞானசேகரன் தனது மோட்டார் சைக்கிளில் பெதப்பம்பட்டி உடுமலை சாலையில் வந்து கொண்டிருந்தார். அவர் சின்னவீரன்பட்டி அருகே வந்த போது சாலையில் வலதுபுறமாக அதிவேகமாக திரும்பிய கார் ஞானசேகரனின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது.

இதில் மோட்டர் சைக்கிளுடன் தூக்கி வீசப்பட்ட ஞானசேகரனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் மோட்டார் சைக்கிள் அப்பளம் போல நொறுங்கியது. இதனையடுத்து ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிய ஞானசேகரனை அருகிலிருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே  உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து ஞானசேகரனின் தந்தை சுந்தரம் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த உடுமலை போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:    

Similar News