தொழில்நுட்பம்
ஆப்பிள்

இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் முதல் விற்பனையகம் இங்கு தான் திறக்கப்பட இருக்கிறது

Published On 2019-10-04 05:45 GMT   |   Update On 2019-10-04 05:28 GMT
இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் முதல் விற்பனையகம் திறக்கப்பட இருக்கும் இடம் பற்றிய விவரங்கள் வெளியாகியுள்ளது.



இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் முதல் விற்பனையகம் பற்றிய விவரங்கள் இணையத்தில் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. அந்த வகையில் தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் சொந்த விற்பனையகம் மும்பையில் அடுத்த ஆண்டு திறக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மும்பையின் பந்த்ரா குர்லா வளாகத்தில் ஆப்பிள் நிறுவனம் தனது முதல் விற்பனையகத்தை திறக்க இருக்கிறது. ஆப்பிள் நிறுவனத்தின் முதல் விற்பனையகம் சுமார் 20,000 முதல் 25,000 சதுர அடி பரப்பளவு கொண்ட இடத்தில் அமைக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இது இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் மிகப்பெரிய ஆப்பிள் ஸ்டோராக இருக்கும் என தெரிகிறது.



தற்சமயம் முதல் ஆப்பிள் விற்பனையகத்திற்கான வடிவமைப்பு, உள்புற மரச்சாமான்களை இறக்குமதி செய்வதற்கான பணிகளில் அந்நிறுவனம் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த விற்பனையகம் அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் திறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஆப்பிள் நிறுவனம் விரைவில் இரண்டு முதல் மூன்று சில்லறை விற்பனையகங்களை இந்தியாவில் திறக்க திட்டமிட்டுள்ளது. தற்சமயம் ஆப்பிள் நிறுவனம் தனது சாதனங்களை ப்ளிப்கார்ட், அமேசான், பே.டி.எம். மால் மற்றும் ஆஃப்லைன் விற்பனையாளர்கள் மூலம் விற்பனை செய்து வருகிறது.
Tags:    

Similar News